Subscribe:
                              

Social Icons

26 ஏப்., 2012

ATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா ?

பணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM  இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காமல் ATM  க்கு பணம் எடுக்க செல்கிறீர்கள்....

நீங்க எது நடக்க கூடாதுன்னு நெனச்சீங்களோ அது இப்போ நடக்க போகுது ..

ஏதோ சொல்லி வச்ச மாதிரியே ஒரு பலே போக்கிரி உங்க துட்டை அடிச்சிட்டு போறதுக்காக ATM  வாசலில் நிற்கிறான் .

ATM  வாசலில் நீங்கள் மிதிக்கவும் உங்கள் கழுத்தில் கத்தி ...

"பணத்த எடுடா" ....திருடன் உங்களை மிரட்ட திரு திருவென்று நீங்கள் விழிக்கிறீர்கள்.

"சத்தம் போட்டா மவனே சொருகிடுவேன் பணத்தை எடுடா"

"அண்ணாச்சி நீங்க தப்பா நெனச்சிட்டீங்க நீங்க நினைக்கிறது மாதிரி நான் பணம் எடுக்க வரலை ....இது டோய்லெட் ஆக  இருக்கும்ன்னு நெனச்சி சூச்சூ போறதுக்காக வந்தேன்"

"அப்படீன்னா இது எதுக்குடா கொண்டு வந்த ..." உங்கள் ATM  கார்டு இப்போது அவன் கையில் 

"அதிகமா வேணாம் ஒரு அம்பதாயிரம் மட்டும் எடுத்து கொடு "..கத்தி மேலும் நெருக்கமாகிறது .




இது போன்றதொரு சூழ் நிலையில் நீங்கள் மாட்டிக்கொண்டால் உங்கள் பணத்தை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்த பதிவுதான் இது .

நேராக ATM  ல் கார்டை செருகி PIN  நம்பரை REVERSE  ஆக டைப் செய்யுங்கள்.உதாரணமாக உங்கள் PIN  நம்பர் 1234  என்றால் 4321  என்று டைப் செய்யுங்கள் . 

அவன் கேட்ட பணம் இப்போது வந்துவிடும் .ஆனால் அவன் அறியாமலேயே அவனுக்கு இப்போது ஒரு ஆபத்து .

உடனடியாக நீங்கள் திருடனிடம் மாட்டிக்கொண்ட விஷயம் அருகிலுள்ள காவல் நிலையத்துக்கு தெரிய வரும் .உங்கள் பணம் மீட்கப் படுவதற்கு வாய்ப்பு ஏற்படும் .

இந்த வசதி அனைத்து ATM  களிலும் செய்யப்பட்டுள்ளது .பலருக்கு இது தெரியாததால் பயன்படுத்துவதில்லை .மனதில் இதை மறக்காமல் வைத்துக்கொள்ளுங்கள் .
                          
                            இது எனக்கு Email மூலமாக வந்த தகவல் .

1 கருத்து:

சக்தி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.