Subscribe:
                              

Social Icons

27 டிச., 2011

மழை பொழிய இது தான் காரணமா? இம்புட்டு நாளா தெரியலையே!

இது நாள் வரை மழை பெய்ய ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு காரணம் நெனச்சிட்டு இருந்திருப்போம். ஆனா இங்கே கீழே இருக்குற படத்தை பார்த்தா உண்மையான காரணம் தெரியவரும். 
நம்ம ஹீரோ மேகம் ஹீரோயின் மேகத்தை லவ் பண்ண பிட்டு போடறார். ஹீரோயினும் கண்ணடிச்சு ஓகே சொல்றாங்க...
            ஹீரோயின் மேகம் இன்னொரு மேகம், யாருயா அது? வேற யாரு? ஹீரோயின் அப்பா தான். ஹீரோ மேகத்துக்கு வார்னிங் கொடுக்கிறாரு. எம்பொண்ணை பார்த்த... பேசின.... அப்படி இப்படின்னு நிறைய டயலாக் பேசுறாரு.
        "போகுதே... போகுதே... என் பைங்கிளி வானிலே...." அப்படின்னு நம்ம ஹீரோ மேகம் ஹீரோயின் மேகத்தை பார்த்து சோகமா பாடறாரு. ஹீரோயின் மேகத்தை அந்த வில்லன் அப்பா தரதர என இழுத்துட்டு போறாரு. அப்பா பேச்சை தட்ட முடியாத ஹீரோயின், ஹீரோவை ஏக்கமா பாக்கறாங்க.
           அடடா.... காதல் முறிஞ்சு போச்சே.... நம்ம ஹீரோவுக்கு, ஒரு பிகர கரெக்ட் பண்ணி அதை லவ் செய்ய இம்புட்டு பாடுபட்டும் தோல்வியா ஆயிருச்சே....
         வேற வழி தெரியாம நம்ம ஹீரோ குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிச்சுட்டார். ஒரு ஆம்பிள இப்படி அழலாமா? 

        ஓ... இதனால தான் வானத்துல இடி இடிச்சு, மின்னல் வெட்டுடன் மழை பெய்யுதா? அப்ப காதல் தோல்வி ரொம்ப இருக்கும் போல வானத்துல.... எப்படியோ நமக்கு மழை பெய்தா சரி?

இரத்தம் தானம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் கவனிக்க வேண்டியது...





நீங்கள் உங்களது ரத்தத்தை தானம் செய்பவரா? உங்கள் ரத்த வகை எந்தெந்த ரத்த வகையோடு சேரும் என உங்களுக்கு தெரியுமா? கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.
இரத்த வகைகள்



எந்த வகையினருக்கு தரலாம்?
எந்த வகையினரிடமிருந்து பெறலாம்?
A+
A+, AB+
A+, A-. O+, O-
O+
O+, A+, B+, AB+
O+, O-
B+
B+, AB+
B+, B-, O+, O-
AB+
AB+
எந்த வகையினரிடமிருந்தும் பெறலாம்
A-
A+, A-, AB+, AB-
A-, O-
O-
எந்த வகையினருக்கும் தரலாம்

O-
O-
B+, B-, AB+, AB-
B-, O-
AB-
AB+, AB-
AB-, A-, B-, O-

























 

மாரடைப்பு வருவதற்கான காரணம்?

டான்சில் மற்றும் குடல் இறக்கம் உள்ளவர்களுக்கு இதயநோய் வருவதற்கான சூழ்நிலைகள் அதிகம் என்று புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சுவீடனில் டான்சிலால் பாதிக்கப்பட்ட 5,500 பேரும், குடல் இறக்கத்தால் பாதிப்பட்ட 2,800 பேரும் இந்த மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அதில் டான்சிலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு 44 சதவீத வாய்ப்பு இருப்பதாக தெரியவந்தது. குடல் இறக்கம் உள்ளவர்களுக்கு 33 சதவீதம் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதாம்.

ஒரே நபருக்கு டான்சில் மற்றும் குடல் இறக்க பாதிப்பு இருந்தால் மிக அதிக அளவில் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஐரோப்பிய இதயநோய் ஆய்வுப் பத்திரிகை இத்தகவலை வெளியிட்டுள்ளது.

Read more: http://dinaex.blogspot.com/2011/12/blog-post_26.html#ixzz1hirtcBvG

26 டிச., 2011

Google Search Engine 'னில் தமிழில் Type செய்யலாம்.



நாம் தினமும் கூகிள் Search Engine உபயோகித்து நமக்கு வேண்டிய தகவல்களை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தேடுகிறோம்.  இது தமிழர்கள் செய்யும் மிக பெரிய தவறு தமிழ் தளங்களை நாமே ஒதுக்கி வைத்தால் யார் தான் தமிழ் தளங்களை படிப்பது நமக்காகதான் அவர்கள் நேரம் செலவழித்து
எழுதுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


நாம் தொடர்ந்து தமிழில் தேடுவதால் தமிழில் எழுதுபவர்களுக்கும் ஆர்வம் உண்டாகும்.  இதனால் தமிழுக்கு Adsense விரைவில் வரும் என்று எதிர்ப்பார்க்கலாம்.


நாம் கூகுளில் தமிழில் தேடாததற்க்கு முக்கிய காரணம்.  நம்மால் கூகுளில் தமிழில் தட்டச்சு செய்ய முடியாது என்பதே.




அதற்க்கு ஒரு வசதி உள்ளது.  முதலில் கூகுளில் தமிழ் மொழியை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.





பிறகு மேலே உள்ள படத்தில் உள்ளது போல் தேடுதல் பெட்டியின் வலது பக்கத்தில் உள்ள தமிழ் Keyboard Click செய்துக் கொள்ளுங்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு  Popup Keyboard வரும்.  அதை மூடாமல் தேடுதல் பெட்டியில் தட்டச்சு செய்யுங்கள்.  இப்போது நீங்கள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் தமிழில் வரும்.

பிளாக்கர் பிளாக்கை முழுவதுமாக BackUp எடுப்பது எப்படி?


நாம் பிளாக் ஆரம்பித்து நடத்திவரும் போது நமது Gmail Account திருடப்பட்டால்?, அல்லது பிளாக்கரில் சிறிய பிரச்சனை ஏற்ப்பட்டுவிட்டது என Google கை விரித்துவிட்டால்?  இன்னும் பல காரணங்கள் உள்ளது.   நாம் இத்தனை காலம் கஷ்டப்பட்டு உருவாக்கிய பிளாக் ஒரு நொடியில் ஒன்றும் இல்லாமல் போய்விடும்.  அதற்காகதான் பிளாகர்
சில காலம் முன்பு பிளாக்கர் Backup வசதியை அறிமுகப்படுத்தியது இது எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் நமது வலைபதிவில் உள்ள Posts, Template, Widgets என எல்லாவற்றையும் எப்படி BackUp எடுப்பது என்பதை பார்க்கலாம்.

Template Backup எடுப்பது எப்படி?
       Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதின் Template 'ஐ Backup எடுத்து கொள்ளலாம்.

இதில் Widgets 'களும் சேர்த்து Backup  எடுக்கப்படும் என நமக்கு தெரியும்.  ஆனால் சில சமயங்களில் Widgets 'களில் Error செய்தி காட்டும் அதனால் இதை தனியாக Backup எடுத்துக் கொள்ளுங்கள்.


Posts Backup எடுப்பது எப்படி?
       Dashboard ==> Settings ==> Export Blog ==> Download Blog என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதின் Post 'களை Backup எடுத்துக் கொள்ளுங்கள்.

இதில் நீங்கள் சிரமப்பட்டு எழுதிய இடுக்கைகள் மற்றும் பல வாசகர்களின் கருத்துரைகள் Backup எடுக்கப்படுகிறது.


Widgets Backup எடுப்பது எப்படி?
        Dashboard ==>  Design சென்று ஒவ்வொரு Widget 'ஐ யும் தனித் தனியாக Edit செய்து வரும் கோடிங்கை Notepad, அல்லது Wordpad 'ல் சேமித்துக் கொள்ளுங்கள்.

தமிழ் வார்த்தைகள் இருந்தால் Wordpad 'ல் சேமித்துக் கொள்ளுங்கள்.  பிளாக்கரில் Defult ஆக வரும் Widgets 'களை Backup எடுக்க தேவையில்லை.

பிளாக்கர் பிளாக்கில் METATAG இணைப்பது எப்படி?



நமக்கு அதிக வாசகர்கள் விளம்பரம் மற்றும் திரட்டிகள் வழியாக வரலாம்.  ஆனால் விளம்பரங்கள் மற்றும் திரட்டிகளினால் வரும் வாசகர்களால் நமது வலைபதிவு/வலைதளத்தின்  Rank உயராது.  Search Engine வழியாக அதிக வாசகர்கள் வந்தால்தான் நமது வலைபதிவு/வலைதளத்தின் Rank உயரும்.  Search Engine 'களில் இணைத்து அதிக
வாசகர்களை பெற நமது வலைபதிவு அல்லது வலைதளத்தில் Metatag இணைக்க வேண்டும்.  இதை எப்படி இணைப்பது என பார்க்கலாம்.


முதலில் Dashboard ==>  Design ==>  Edit HTML ==>  Download Full Template என்பதை தேர்வுசெய்து உங்கள் வலைப்பதிவை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

 பிறகு Dashboard ==>  Design ==>  Edit HTML செல்லுங்கள்.

 பிறகு ( CTRL+F ) அழுத்தி கீழே உள்ள கோடிங்கை கண்டுபிடியுங்கள்.

<head>

கண்டுபிடித்த கோடிங்கின் கீழே.  இங்கே கீழே கொடுத்துள்ள கோடிங்கை Copy and Paste செய்யுங்கள். 

<b:include data='blog' name='all-head-content'/>

<b:if cond='data:blog.pageName == &quot;&quot;'>
<title><data:blog.title/></title>
<b:else/>
<title><data:blog.pageName/> | <data:blog.title/></title>
</b:if>

<meta content='YOUR KEYWORDS HERE' name='keywords'/>

<meta content='YOUR DESCRIPTION HERE' name='description'/>

<meta content='http://YORU BLOG/SITE ADDRESS/feeds/posts/default?orderby=updated' name='sitemap'/>

மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ளதுதான் நமது TITLE TAG இது மிக அதிக வாசகர்கள் வருவதற்கு வசதியாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

மேலே நீல வண்ணத்தில் உள்ள YOUR KEYWORDS HERE என்ற இடத்தில் உங்கள் வலைதளத்திற்கு சம்பந்தமான சில சொற்களை சேர்த்துக் கொள்ளுங்கள்.

YOUR KEYWORDS HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='கம்ப்யூட்டர், பிளாக்கர், tips, Computer, Share, blogger, widget' name='keywords'/>

YOUR DESCRIPTION HERE என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='கம்ப்யூட்டர், பிளாக்கர் மற்றும் மொபைல் டிப்ஸ் பதிவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.' name='description'/>

 YORU BLOG/SITE ADDRESS என்பதை இவ்வாறு இணைத்து விடுங்கள்.  (example)

<meta content='http://sakthininja.blogspot.com/feeds/posts/default?orderby=updated' name='sitemap'/>

பிறகு SAVE TEMPLATE என்பதை அழுத்தி சேமித்துக் கொள்ளுங்கள்.

இணையத்தில் இலவசமாக கோப்புக்களை சேமித்து வைக்கலாம்!



இணையத்தில் கோப்புகளை சேமிப்பதற்கு பல தளங்கள் உதவி புரிகின்றன. அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருக்கும் தளத்தில் 5GB கொள்ளளவு உள்ள தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம்.கணினியில் தகவல்களை சேமித்தால் சில நேரங்களில் ஏதாவது வைரஸ் தாக்குதலினால் தகவல்களை மீட்க முடியாமல் போகலாம், ஓன்லைன் மூலம் நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்கள் மற்றும் பல தகவல்களை இலவசமாக சேமித்து வைக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Sign in என்பதை சொடுக்கி நாம் புதிதாக ஒரு இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி கொண்டு நம் தகவல்களை பதிவேற்றலாம், தனித்தனியாக கோப்பறை அமைத்து வகைப்படுத்தி பதிவேற்றலாம்.


ஓடியோ, வீடியோ, பிடிஎப் என அனைத்து வகையான கோப்புகளையும் சேமிக்கலாம். எந்த நாட்டிற்கு சென்றாலும் கையில் தகவல்களை எடுக்காமல் போனாலும் கவலை இல்லாமல் இத்தளத்திற்கு சென்று நம் பயனாளர் கணக்கை கொடுத்து எங்கிருந்து வேண்டுமானாலும் நம் தகவல்களை எடுக்கலாம்.


ஆண்டிராய்டு போனில் இருந்தும் பதிவேற்றலாம், பதிவிறக்கும் வசதியும், மேலும் பல கூடுதல் வசதிகளும் உள்ளது. 5GB வரை சேமிப்பதற்கு இடம் கொடுக்கும் இந்தத்தளம் தகவல்களை ஓன்லைனில் சேமிக்க உதவும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

இனையதள முகவரி:http://cdn.cloud.cm/index_main.html

Wi-Fi (வை-ஃபை) - பற்றி ஓர் அதிர்ச்சி தகவல்!


லேப்டாப் (மடிக்கணனி)களில் Wi-Fi (வை-ஃபை) மூலம் இன்டர்நெட்டினை உபயோகிக்கும் போது ஆண்கள் அக்கணனிகளை தமது மடியில் வைத்து உபயோகிப்பதனை தவிர்க்குமாறு புதிய ஆய்வொன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு மடியில் வைத்து லேப்டாப் (மடிக்கணனி)களைப் பயன்படுத்துவதன் மூலம் மின்காந்த கதிர்வீச்சினால் ஆண்களின் விந்தணு பாதிக்கப்படுவதாக ஆய்வில் நிரூபணமாகியுள்ளது.
இக்கதிர்வீச்சினால் விந்தணுவின் டி.என்.ஏ பாதிக்கப்படுவதுடன் அதன் வீரியமும் குறைவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆண்மை பாதிக்கப்படுவதாகவும் இது தொடர்பில் அதிக அக்கறை கொள்ளும்படியும் அவ்வாராய்ச்சியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செல்ஃபோன்கள் (கையடக்கத்தொலைபேசி) மற்றும் லேப்டாப் (மடிக்கணனி) ஊடாகவும் Wi-Fi (வை-ஃபை) உபயோகிக்கும் போதும் இது தொடர்பில் கவனமாக இருக்கும் படியும் ஆராய்ச்சியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதன்போது 29 பேரின் விந்தணு மாதிரிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
Wi-Fi (வை-ஃபை) இல்லாமல் லேப்டாப் (மடிக்கணனி)யை உபயோகித்து பரிசோதனை செய்தபோது விந்தணுக்களுக்கு பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லையெனவும், ஆனால் Wi-Fi (வை-ஃபை)யை உபயோகித்தபோதே இப்பாதிப்பு மோசமாக இருந்ததாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர லேப்டாப் (மடிக்கணனி)களின் வெப்பம் அதிகரிக்கும் போதும், வாகனங்களின் சூடான இருக்கைகளும் ஆண்களின் விந்தணுக்களை பாதிப்பதாக ஆய்வுகளில் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை லேப்டாப் (மடிக்கணனி)களை அதிக நேரம் நமது கால்களின் மீது வைத்து உபயோகிப்பதன் மூலம், ஒருவித தோல் நோய்க்கு உள்ளாகும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாகக் கடந்த வருடத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் Wi-Fi (வை-ஃபை) பற்றி சில தகவல்கள்:
WI -FI  விரிவாக்கம் WIRELESS FIDELITY என்பதாகும்.
 
NETHERLAND இல் 1991 ஆம் ஆண்டு NCR & AT என்ற இரண்டு நிறுவன மூலம் உருவாக்கப்பட்டன WIRELESS FIDELITY என்பதாகும். WI–FI யின் தந்தை என அழைக்கப்பட்டவர் VIC HAYE’S ஆவார்.  இவர் IEEE802.11b மற்றும் 802.11aஎன்பதற்கு கீழ் இதை ஆரம்பித்தார். WIFI என்பது WLAN(WIRELESS LOCAL AREA NETWOEK)என்பதற்கு உரியதாகும்.

மாறும் கணினியுகம்-2012

கூகுள், யாஹூ, ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மதங்களுக்கு எதிரான மற்றும் சமூகத்திற்கு எதிரான வாசகங்களை உடனடியாக நீக்க வேண்டும் என டில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வாசகங்களை பிப்ரவரி 6ம் தேதிக்குள் நீக்க வேண்டும் என குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு நேரடியாகவே உத்தரவு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. புகாரில் இடம்பெற்ற 22 இணையதளங்களில் யாஹூ இந்தியா மற்றும் மைக்ரோ சாஃப்ட் ஆகிய நிறுவனங்கள் நீதிமன்ரத்தைநேரில்அணுகி, ஆணை நகல் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும், மனுவின் நகல் தங்களுக்கு தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளன.  மதஉணர்வுகளை காயப்படும் சர்ச்சைக்குரிய வாசகங்கள் சமூக வலைதள புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் வாக்கியங்களில் இடம்பெற்றிருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

வரும் ஆண்டு வாய்ப்பேச்சு குறையும் ? 
2012 ஆண்டில், பல புதியவைகள்தகவல் தொழில் நுட்ப துறையில் மாற்றங்களை ஏற்படுத்த உள்ளன. இதனை இந்த ஆண்டில் அறிமுகமான,  சாதனங்கள் உறுதி செய்கின்றன. நிச்சயமாய் மாற்றங் களை ஏற்படுத்தப்போகும் பொருட்களைப் பற்றி காணலாம்.
 விண்டோஸ் 8: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 8 ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் இதுவரை விண்டோஸ் இயக்கங்களில் இல்லாத பல புதுமை களைக் கொண்டு வர இருக்கிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கிடையே உள்ள வேறுபாட்டினை உறுதியிட்டுக் கூற முடியாத வகையில், இரண்டையும் ஒரே இயக்கத்தில் கொண்டு வர உள்ளது. இதனால் பெர்சனல் கம்ப்யூட்டர் சந்தையின் இயக்கம் குறைந்து நோட்புக் கம்ப்யூட்டர்களுக்கும் டேப்ளட் கம்ப்யூட்டர்களுக்கும் உள்ள வேறுபாடு மறைய உள்ளது. குறிப்பாக தொடுதிரை பயன்பாடு இரண்டிலும் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மூலம் ஒரே மாதிரியாக பயன்படுத்தப்பட இருக்கிறது.
 
குரல் மூலம் கட்டளை: தற்போது ஐ-போன் 4 எஸ், ஸ்மார்ட் போன்களில் இணைந்து கிடைக்கும் சிரி (Siri) இயக்க தொழில் நுட்பத்தின் வெற்றி, இன்று பலரை குரல் வழி கட்டளைக்கு தயார் படுத்தியுள்ளது. இந்த சாப்ட்வேர் தொழில் நுட்பத்தின் மூலம் குரல்வழி கட்டளைகளைக் கொடுத்து மெசேஜ் அனுப்பலாம்; அழைப்புகளை வரிசைப்படுத்தி ஏற்படுத்தலாம்; சந்திப்புகளை அமைக்கலாம். நீங்கள் சாதாரணமாகப் பேசி இதனைப் பக்குவப்படுத்தி, பின்னர் கட்டளைகளை போகிறபோக்கில் அளிக்கலாம். அவை அனைத்தும் நிறைவேற்றப்படும். போனில் மைக் ஐகான் ஒன்றைத் தட்டி, செய்தியை குரல் வழிச் செய்தியாகத் தரலாம். அனைத்தும் தந்து முடித்தவுடன், உங்கள் செய்தி டெக்ஸ்ட்டாக மாற்றப்பட்டு, பின்னர் உங்கள் அனுமதி பெற்று அனுப்பப்படும்.
பெர்சனல் கம்ப்யூட்டரில் இது பயன்படுத்தப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கூறலாம்.

 இந்த தொழில் நுட்பம் எங்கு இயங்காது என்று தற்போது எண்ணப்படுகிறதோ, அங்கு இது சோதனை செய்து பார்க்கப்பட்டு நிச்சயம் கம்ப்யூட்டரிலும் பிற சாதனங்களிலும் கிடைக்கும். இணைய தளங்களிலும் சிரி இயக்க இன்டர்பேஸ் போல அமைக்கப்படலாம். இதன் மூலம் நாம் அதில் சென்று வருவது எளிதாக்கப்படலாம். பெரும்பாலும் இது போன்ற சோதனைகள் சீனாவில் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வரும்காலங்களில் இமெயில் பயன்பாடு குறைந்து சமுதாய இணைய தளங்களில் தங்களைப் பதிவு செய்து கொண்டு செயல்படுவது அதிகரிக்கும்.
தொலைக்காட்சி பெட்டிகள் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை மேற்கொள்ளும் காலம் வந்துவிட்டது. இணைய பயன்பாடு கொண்ட டிவிக்கள் வரத் தொடங்கி விட்டன. திரைப்படங்களையும், தேவைப் படும் காட்சிகளையும், கேம்ஸ்களையும், விளையாட்டுப் போட்டிகளையும் கேட்டு வாங்கிப் பார்ப்பது, இந்த டிவிக்கள் மூலம் வளர்ச்சி அடையும். இத்தகைய சாதனங்கள், இனி கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டினையே முதன்மையாகக் கொண்டு இயங்கும். அவற்றுடன் டிவி சேனல்களையும் காட்டும். 
 அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளையோ, வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களையோஇனி வெளியே வாங்க வேண்டியதிருக்காது. அந்த அந்த நிறுவனங்களின் அப்ளிகேஷன் ஸ்டோர் களிலிருந்து இணையம வழியாக நம்பிக்கையுடன் வாங்கிக் கொள்ளலாம். ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் இந்த வழியில் நிலையான தங்கள் வர்த்தகத்தை வளர்த்துக் கொண்டு வருகின்றன. 

 டிஜிட்டல் பொருட்களின் தடிமனைக் குறைத்து பாக்கெட்களில் வைத்து இயக்கும் அளவிற்கு, ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் சாதனங்களின் தடிமனைக் குறைத்து வருகின்றன. இதற்கு முதலில் வழி வகுத்தது ஐ-பேட் மற்றும் அல்ட்ரா புக் கம்ப்யூட்டர்களே. கம்ப்யூட்டர் மட்டுமின்றி, மொபைல் போன்கள், ஸ்மார்ட்போன்கள், டேப்ளட் பிசிக்கள், டிவிக்களும் தங்கள் தடிமன் குறைந்த பதிப்புகளை வெளியிட்டு வருகின்றன. வரும் 2012ல் இவை மட்டுமே விற்பனையாகும். 
டேப்ளட் பிசி சாம்சங் நிறுவனம் டேப்ளட் பிசி இணைந்த ரெப்ரிஜிரேட்டர் ஒன்றை வடிவமைத்து  வெளியிட்டுள்ளது. இனி கார்களின் டேஷ் போர்டில், டேப்ளட் பிசிக்கள் இணைந்து கிடைக்கும்.
 ஆன்லைன் விளையாட்டு வருங்காலங்களில் ஸ்மார்ட் போன்கள் வழியாக இருவர் தனி நபர் விளையாட்டு விளையாடலாம். இதற்கு நெட்வொர்க் தேவைப்படாது. இரண்டு போன்கள் தங்களுக்குள் நெட்வொர்க் உதவியின்றி பேசிக் கொள்ள முடியும். இந்த வசதி வலுப்படுத்தப்பட்டு, பல வகையான தொடர்புகளை ஏற்படுத்தித் தரும்.

எப்படியோ இனி வரும்ஆண்டுகளில் மின்னணுசாதனங்களின் தடிமன் மிகக் குறைவாக இருக்கும்; சமுதாய இணைப்பு தருவதாக இயங்கும்;ஒருவருக்கொருவர் இணைப்பு கொள்வது, பேசுவதும், விளையாடுவதும், தகவல்களைப் பரிமாறிக் கொள்வதும் மிக மிக எளிதாக
மாறிவிடும்.விலைகளும் கையை கடிக்காத அளவு எல்லோரும் வாங்கும் வகையில் இருக்கும்.இனி வாய்ப் பேச்சுகளும் நேரடியாக பார்த்து பேசும் வழக்கமும் கூட தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் மாறி குறைண்டு போகும் வாய்ப்புள்ளது.

22 நவ., 2011

அமில மழை பொழிவதற்கான காரணம் என்ன அறிந்து கொள்ளுங்கள்!

சாதாரண மழையில் நாம் நனைந்திருப்போம், `ஜில்’லென்ற உணர்வை அனுபவித்திருப்போம். சில சமயங்களில் மழை பெய்யும்போது அதில் அமிலத் தன்மை அதிகமாக இருக்கும். அந்த மழையை `அமில மழை’ என்கிறார்கள். சாதாரணமாகப் பெய்யும் மழையில் அமிலத்தன்மை மிகவும் குறைவாக இருக்கும். ஏனென்றால், வானவெளியில் உள்ள கரியமில வாயு மழைநீருடன் கலந்து வீரியமில்லாத கார்பானிக் அமிலமாக மாறிவிடுகிறது. அமில மழையிலோ, கந்தகமும், நைட்ரஜன் ஆக்சைடுகளும் கலந்துவிடுவதால் கந்தக மற்றும் நைட்ரிக் அமிலங்கள் உருவாகிவிடுகின்றன. அதை, `வீரியம் மிக்க அமில மழை’ என்கிறார்கள்.



அமில மழை பொழிவதற்கான காரணம் என்னவென்று அறியலாம்…

வானத்தில் சூழ்ந்திருக்கும் இயற்கை நிலைமைகள் பொதுவாக அமில மழைக்குக் காரணமாகின்றன. அத்துடன், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை மூலம் வானத்தில் நைட்ரஜன் ஆக்சைடுகள் அதிகரிக்கின்றன. அடிக்கடி குமுறும் எரிமலைகளும், காடுகள் தீப்பிடிப்பதால் ஏற்படும் புகையும், மின்னல் மற்றும் திடப்பொருட்களின் நொதிவு ஆகியவையும் வானத்தில் வீரிய அமிலத் தன்மையை உண்டாக்குகின்றன. தொழிற்சாலைகள் மிகுந்துள்ள நாடுகளிலும், மோட்டார் வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள பிரதேசங்களிலும் அமில மழை அதிகமாகப் பெய்வதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.
நிலப்பரப்பில் கால்சியம் கார்பனேட் பத்து மில்லி கிராமுக்கு குறைவாக இருந்தால் அந்த நிலப்பரப்பில் அமில மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. அமில மழை அடிக்கடி பெய்யும் இடங்களில் கடல் பகுதியில் உள்ள மீன்கள் பெருமளவில் உயிரை இழக்கின்றன. அந்தப் பிரதேசங்களில் உள்ள சின்னஞ்சிறு உயிரினங்களும் அமில மழையால் உயிரிழக்க நேரிடுகிறது. சமீப காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், அமில மழையால் தாவர இனங்களும் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

20 அக்., 2011

டைட்டானிக் கப்பல்

உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட பெரிய கப்பல் டைட்டானிக். டைட்டானிக் கப்பல் வடஅயர்லாந்து நாட்டில் உருவாக்கினார்கள். இக்கப்பல் 900 அடி நீளமும் 40ஆயிரத்து 278 டன் எடையும் 11 அடுக்குகளும்  கொண்டது.

கப்பல் இயக்கப்பட்ட நாள்  10 ஆகஸ்ட்  1912,பிரன்ஸ் மற்றும் அயர்லாந்த் பயனிகளை ஏற்றிக் கொண்டு அமேரிக்காவை நோக்கி பயனித்தது. இதில் 2235 பயனிகள் இருந்தனர்,தேனிலவு ஜோடி 26 தம்பதிகளும் இருந்தனர்.
கப்பல் நடுகடலில்  பயனித்துக்கொண்டிருந்தது,ஏப்ரல் 15 ம் தேதி 2.20 மணிக்குதான் உலகையே  சோகத்தில் மூழ்கடித்த அந்த கோர சம்பவம் நடந்தது. 2235 பயனிகளை ஏற்றி வந்த பிமாண்ட கப்பல் கடலில் மூல்கியது.
அதில் சம்பவ இடத்திலேயே 1517 பயணிகள் இறந்தனர், 783 யபணிகள்
உயிர் தப்பினர்.

உலக நாடுகளின் முதல் பெரிய கப்பல் தற்போது 12 ஆயிரம் அடி ஆளத்தில் கடலுக்கு அடியில் உள்ளது.

உயிர் தப்பியவர்கள் சொன்னதின் அடிப்படையில் 1997 ம் ஆண்டு டைட்டானிக் படம் தயாரிக்கப்பட்டது.முதல் நாளே 134 கோடி வசுல் படைத்தது.

இதில் நான் கொடுத்துள்ள தகவல் படித்தவையே,தவராக இருந்தால் மன்னித்துவிடுங்கல்

12 அக்., 2011

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.



இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.


ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன.     
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
 திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

   இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே

நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.  அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!



எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!


எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நமக்கு மேலே ஒருவனடா....

11 அக்., 2011

இலவசமாக ஹெலிகாப்டரில் ஊர் சுற்றலாம்


ஊர் சுற்றுவது என்பது நமக்கு பிடித்தமான ஒன்றாகும். கொஞ்சம் பணமிருந்தால் ஊர் சுற்றலாம், அதிகம் பணம் இருந்தால் நாடு சுற்றலாம். ஆனால் இணையம் மட்டும் இருந்தால் போதும், இனி இலவசாக ஊரும் சுற்றலாம், நாடும் சுற்றலாம். அதுவும் ஹெலிகாப்டரில்!

கூகிள் மேப் (Google Map) பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். உலக வரைப்படத்தை நம் கண்முன்னே காட்டும் அதிசய தளம். இது வரை இதில் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் முப்பரிணாம பார்வை (3D View), தெருக்களின் பார்வை (Street View), சாட்டிலைட் பார்வை (Satellite View) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான் ஹெலிகாப்டர் பார்வை (Helicopter View).

ஏற்கனவே கூகிள் மேப்பில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்வதற்கான வழியை காட்டும் வசதி உள்ளது. தற்போது அந்த வழியினை ஹெலிகாப்டரில் இருந்து பார்ப்பது அல்லது பயணிப்பது போன்றும் காட்டுகிறது.

இதனை பயன்படுத்த, maps.google.com என்ற முகவரிக்கு செல்லவும்.
அங்கு இடது புறம்    என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
பிறகு  A என்ற இடத்தில் நீங்கள் எங்கிருந்து செல்ல வேண்டுமோ, அந்த இடத்தை கொடுக்கவும்.
B என்ற இடத்தில் எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தை கொடுக்கவும். பிறகு Get Direction என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
 அவ்வாறு கொடுத்தப்பின், இரண்டு இடத்திற்குமான வழியின் வரைபடத்தை காட்டும்.
இடதுபுறம் அந்த வழிகளின் முழு விவரத்தையும் காட்டும். அங்கு 3d என்னும் பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்யவும்.
அதனை க்ளிக் செய்தவுடன் நீங்கள் வானிலிருந்து  செல்வது போன்று நகரும். இது தான் ஹெலிகாப்டர் பார்வையாம். இப்படி ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு, அல்லது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் செய்யலாம்.
சரி, நீண்ட தூரம் பயணம் செய்யும் போது வழியில் டீ, காபி குடிக்க என்ன செய்யுறதுன்னு யோசிக்கிறீங்களா? ஒன்னும் பிரச்சனையில்லை. அந்த வரைபடத்தில் கீழே இடதுபுறம் Play/Pause பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்து, டீ, காபி குடிக்க செல்லலாம். அப்படியே அந்த இடத்தில் பக்கத்தில் இருக்கும் ஊருக்கும் செல்லலாம்.
உதாரணத்திற்கு, சென்னை ஸ்பென்சர் ப்ளாசாவில் இருந்து மெரீனா கடற்கரைக்கு பயணிக்கும் வீடியோவை பாருங்கள்.

இலவசமாக ஹெலிகாப்டரில் ஊர் சுற்ற தயாரா?
பிற்சேர்க்கை:
இந்த வசதியை பெற நீங்கள் உங்கள் இணைய உலவியில் Google Earth Plugin-ஐ நிறுவியிருக்க வேண்டும். அதனை நிறுவ இங்கே க்ளிக் செய்யவும்.

10 அக்., 2011

மின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்.

 
பலநேரங்களில் நான் மின்சார வாரிய அலுவலகம் வழியாக
செல்லும்போது அங்கு காணும் காட்சி.மின்சார கட்டணத்தை செலுத்த, மின்சார அலுவலகத்தின் முன் பலமணிநேரம்
கால்கடக்க நின்று பணம் செலுத்துவதற்காக அந்த வெயிலில்
பலர்நிற்பதை பார்த்து இருக்கிறேன். அதிலும் பல முதியவர்கள்
நிற்பது மிகவும் கொடுமையாக இருக்கும்.

இவர்களுக்கு வேறுவழி இல்லையா எண்டு நினைக்கும் போது.
என் நண்பர்கள் வழியாக எனக்கு அறிமுகம் ஆனது ஒரு எளிய
வழி. அதுதான்  Online Payment of Electricity Bill.

____
தமிழ் நாடு மின்சார வாரியம் online மூலம் பணத்தை செலுத்தும்
வசதியை கொண்டுவந்து உள்ளது. நீங்கள் உங்கள் மின்சார
கட்டணத்தை செலுத்த http://www.tneb.in/ என்ற தளத்துக்கு
சென்று, முதலில் உங்கள் தகவலை பதிவுசெய்து கொள்ள
வேண்டும். அதன் பிறகு கட்டணத்தை online மூலம் எளிதாக செலுத்தலாம். கண்டிப்பாக பலருக்கு இது உபயோகமாக
இருக்கும் என்று நினைக்கிறேன்.இந்த சேவை தற்போது
சென்னை மற்றும் கோவையில் மட்டும் வழங்கபடுகிறது.
விரைவில் மற்ற நகரத்துக்கும் விரிவுபடுத்த படும்
என்று எதிர்பார்போம்

Airtel 'லில் நமக்குத் தேவை இல்லாத வசதிகளை நாமே நிறுத்தலாம்.




இந்தியாவில் முதல் இடத்தில் உள்ள மொபைல் ஆப்பரேட்டர் ஏர்டெல் என்பது எல்லோருக்கும் தெரியும்.  எல்லா மொபைல் ஆப்பரேட்டர்களிலும் உள்ள ஒரு முக்கிய பிரச்சனை ஏதாவது ஒரு Service activate ஆகி இருந்ததென,
நாம் பணம் போடும்போது நம் பணத்தை மொத்தமாக எடுத்துவிடுவார்கள் அல்லது தினமும் ஒரு ஒரு ரூபாயாக எடுத்து விடுவார்கள்.  பிறகு Customer Care 'க்கு போன் செய்தால்.  அவர்கள் 24 மணி நேரத்தில் நிறுத்திவிடுகிறோம் என்று கூறுவார்கள் அதை நம்பி நாம் Recharge செய்தால் திரும்பவும் பணம் போய்விடும்.

ஆனால் இந்தியாவில் முதன்மை ஆப்பரேட்டர்களில் உள்ள ஏர்டெல் அந்த பொறுப்பை நம்மிடமே விட்டுவிட்டது.

புதிதாக எதாவது Service Activate அல்லது DeActivate என எது வேண்டுமானாலும் நாமே நம் மொபைலிலேயே செய்துக் கொள்ளலாம். 


எப்படி என்பதை பார்க்கலாம்?

முதலில் *121# Dial  செய்யுங்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு Menu தோன்றும்.


  1. My Airtel My Offer
  2. Balance & Validity
  3. Coupon Recharge
  4. Start a Service 
  5. Stop a Service
  6. Recharge Now
0. Next

Replay With your Choice.


இதில் 5 அதாவது Stop a Service தேர்ந்தெடுத்து Reply செய்யுங்கள்.
பிறகு ஒரு Menu தோன்றும் அதில் உங்கள் மொபைலில் என்ன Service Activate ஆகியுள்ளது என தெரியும்.

  1. Teen Pack
  2. SMS Pack

என இவ்வாறு தோன்றும்.


இதில் உங்களுக்கு எந்த Service வேண்டாமோ அதை (அதாவது 1 அல்லது 2 ஐ ) தேர்ந்தெடுத்து Reply செய்யுங்கள்.

பிறகு வரும் மெனுவில் 1 தேர்ந்தெடுத்து Reply செய்யுங்கள்.  இப்போது உங்கள் Service முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கும்.

இனி Recharge செய்து பேசி மகிழுங்கள்.   

உலகிலேயே விலை குறைவான கம்ப்யூட்டர்-ஆகாஸ்


 

டிஎன்எஸ்- 'டாடா விண்ட்' என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தயாரித்துள்ள கம்ப்யூட்டர்  (அக்டோபர்-6) தில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிலேயே மிகவும் விலை குறைந்த இந்த கம்ப்யூட்டருக்கு, 'ஆகாஷ்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டு, 7 அங்குல அகல தொடு திரை மற்றும் வீடியோ வசதி கொண்ட நவீன கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

மாணவர்களின் தொழில் நுட்ப திறனை அதிகரிக்க வேண்டும் என்றும், கிராம மாணவர்களுக்கும் நகர மாணவர்களைபோல அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த கம்ப்யூட்டரின் விலை தற்போது ரூ.2,276 ஆகிறது. இது, பாதி விலையில் மாணவர்களுக்கு, வரும் 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வழங்கப்படும்.

கூடுதலாக மேலும் 10 லட்சம் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்ய கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்க இருக்கிறோம். அப்போது இதன் விலை ரூ.1,750 ஆக இருக்கும். ஒரு கம்ப்யூட்டரின் விலையை 500 ரூபாய்க்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த கம்ப்யூட்டர்கள் 9-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவில் மாணவர்களுக்கு பாதி விலையில் கம்ப்யூட்டர்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. இதைத்தொடர்ந்து 'டாடா விண்ட்' என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்துக்கு முதல் கட்டமாக 1 லட்சம் கம்ப்யூட்டர்கள் (லேப்டாப்) உற்பத்தி செய்ய மத்திய அரசு ஆர்டர் வழங்கியது.

'ஆகாஷ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர், உலகிலேயே மிகவும் விலை குறைந்த கம்ப்யூட்டராகும்.