Subscribe:
                              

Social Icons

20 அக்., 2011

டைட்டானிக் கப்பல்

உலகில் முதன்முதலில் உருவாக்கப்பட்ட பெரிய கப்பல் டைட்டானிக். டைட்டானிக் கப்பல் வடஅயர்லாந்து நாட்டில் உருவாக்கினார்கள். இக்கப்பல் 900 அடி நீளமும் 40ஆயிரத்து 278 டன் எடையும் 11 அடுக்குகளும்  கொண்டது.

கப்பல் இயக்கப்பட்ட நாள்  10 ஆகஸ்ட்  1912,பிரன்ஸ் மற்றும் அயர்லாந்த் பயனிகளை ஏற்றிக் கொண்டு அமேரிக்காவை நோக்கி பயனித்தது. இதில் 2235 பயனிகள் இருந்தனர்,தேனிலவு ஜோடி 26 தம்பதிகளும் இருந்தனர்.
கப்பல் நடுகடலில்  பயனித்துக்கொண்டிருந்தது,ஏப்ரல் 15 ம் தேதி 2.20 மணிக்குதான் உலகையே  சோகத்தில் மூழ்கடித்த அந்த கோர சம்பவம் நடந்தது. 2235 பயனிகளை ஏற்றி வந்த பிமாண்ட கப்பல் கடலில் மூல்கியது.
அதில் சம்பவ இடத்திலேயே 1517 பயணிகள் இறந்தனர், 783 யபணிகள்
உயிர் தப்பினர்.

உலக நாடுகளின் முதல் பெரிய கப்பல் தற்போது 12 ஆயிரம் அடி ஆளத்தில் கடலுக்கு அடியில் உள்ளது.

உயிர் தப்பியவர்கள் சொன்னதின் அடிப்படையில் 1997 ம் ஆண்டு டைட்டானிக் படம் தயாரிக்கப்பட்டது.முதல் நாளே 134 கோடி வசுல் படைத்தது.

இதில் நான் கொடுத்துள்ள தகவல் படித்தவையே,தவராக இருந்தால் மன்னித்துவிடுங்கல்

12 அக்., 2011

நாசாவுக்கே தண்ணிகாட்டிய திருநள்ளாறு!

" இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன.  அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.  சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது.  3 வினாடிகளுக்கு பிறகு  வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித  பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.



இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.


ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு  அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும்   ஸ்தம்பித்துவிடுகின்றன.     
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும்  கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.  விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன.   அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த  விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால்  இந்த கோவில்தான்  இந்துக்களால்  'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது.  இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை  திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர்.  மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.  அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர்.   இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
 திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

   இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும்.  நாம் பல  செயற்கைகோள்கள்  கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே

நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள்.  அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!



எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!


எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

நமக்கு மேலே ஒருவனடா....

11 அக்., 2011

இலவசமாக ஹெலிகாப்டரில் ஊர் சுற்றலாம்


ஊர் சுற்றுவது என்பது நமக்கு பிடித்தமான ஒன்றாகும். கொஞ்சம் பணமிருந்தால் ஊர் சுற்றலாம், அதிகம் பணம் இருந்தால் நாடு சுற்றலாம். ஆனால் இணையம் மட்டும் இருந்தால் போதும், இனி இலவசாக ஊரும் சுற்றலாம், நாடும் சுற்றலாம். அதுவும் ஹெலிகாப்டரில்!

கூகிள் மேப் (Google Map) பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள். உலக வரைப்படத்தை நம் கண்முன்னே காட்டும் அதிசய தளம். இது வரை இதில் பல்வேறு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் முப்பரிணாம பார்வை (3D View), தெருக்களின் பார்வை (Street View), சாட்டிலைட் பார்வை (Satellite View) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. தற்போது மேலும் ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான் ஹெலிகாப்டர் பார்வை (Helicopter View).

ஏற்கனவே கூகிள் மேப்பில் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு செல்வதற்கான வழியை காட்டும் வசதி உள்ளது. தற்போது அந்த வழியினை ஹெலிகாப்டரில் இருந்து பார்ப்பது அல்லது பயணிப்பது போன்றும் காட்டுகிறது.

இதனை பயன்படுத்த, maps.google.com என்ற முகவரிக்கு செல்லவும்.
அங்கு இடது புறம்    என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
பிறகு  A என்ற இடத்தில் நீங்கள் எங்கிருந்து செல்ல வேண்டுமோ, அந்த இடத்தை கொடுக்கவும்.
B என்ற இடத்தில் எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தை கொடுக்கவும். பிறகு Get Direction என்ற பட்டனை க்ளிக் செய்யவும்.
 அவ்வாறு கொடுத்தப்பின், இரண்டு இடத்திற்குமான வழியின் வரைபடத்தை காட்டும்.
இடதுபுறம் அந்த வழிகளின் முழு விவரத்தையும் காட்டும். அங்கு 3d என்னும் பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்யவும்.
அதனை க்ளிக் செய்தவுடன் நீங்கள் வானிலிருந்து  செல்வது போன்று நகரும். இது தான் ஹெலிகாப்டர் பார்வையாம். இப்படி ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு, அல்லது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பயணம் செய்யலாம்.
சரி, நீண்ட தூரம் பயணம் செய்யும் போது வழியில் டீ, காபி குடிக்க என்ன செய்யுறதுன்னு யோசிக்கிறீங்களா? ஒன்னும் பிரச்சனையில்லை. அந்த வரைபடத்தில் கீழே இடதுபுறம் Play/Pause பட்டன் இருக்கும். அதனை க்ளிக் செய்து, டீ, காபி குடிக்க செல்லலாம். அப்படியே அந்த இடத்தில் பக்கத்தில் இருக்கும் ஊருக்கும் செல்லலாம்.
உதாரணத்திற்கு, சென்னை ஸ்பென்சர் ப்ளாசாவில் இருந்து மெரீனா கடற்கரைக்கு பயணிக்கும் வீடியோவை பாருங்கள்.

இலவசமாக ஹெலிகாப்டரில் ஊர் சுற்ற தயாரா?
பிற்சேர்க்கை:
இந்த வசதியை பெற நீங்கள் உங்கள் இணைய உலவியில் Google Earth Plugin-ஐ நிறுவியிருக்க வேண்டும். அதனை நிறுவ இங்கே க்ளிக் செய்யவும்.

10 அக்., 2011

மின்சார கட்டணம் செலுத்த உதவும் எளிய வலைத்தளம்.

 
பலநேரங்களில் நான் மின்சார வாரிய அலுவலகம் வழியாக
செல்லும்போது அங்கு காணும் காட்சி.மின்சார கட்டணத்தை செலுத்த, மின்சார அலுவலகத்தின் முன் பலமணிநேரம்
கால்கடக்க நின்று பணம் செலுத்துவதற்காக அந்த வெயிலில்
பலர்நிற்பதை பார்த்து இருக்கிறேன். அதிலும் பல முதியவர்கள்
நிற்பது மிகவும் கொடுமையாக இருக்கும்.

இவர்களுக்கு வேறுவழி இல்லையா எண்டு நினைக்கும் போது.
என் நண்பர்கள் வழியாக எனக்கு அறிமுகம் ஆனது ஒரு எளிய
வழி. அதுதான்  Online Payment of Electricity Bill.

____
தமிழ் நாடு மின்சார வாரியம் online மூலம் பணத்தை செலுத்தும்
வசதியை கொண்டுவந்து உள்ளது. நீங்கள் உங்கள் மின்சார
கட்டணத்தை செலுத்த http://www.tneb.in/ என்ற தளத்துக்கு
சென்று, முதலில் உங்கள் தகவலை பதிவுசெய்து கொள்ள
வேண்டும். அதன் பிறகு கட்டணத்தை online மூலம் எளிதாக செலுத்தலாம். கண்டிப்பாக பலருக்கு இது உபயோகமாக
இருக்கும் என்று நினைக்கிறேன்.இந்த சேவை தற்போது
சென்னை மற்றும் கோவையில் மட்டும் வழங்கபடுகிறது.
விரைவில் மற்ற நகரத்துக்கும் விரிவுபடுத்த படும்
என்று எதிர்பார்போம்

Airtel 'லில் நமக்குத் தேவை இல்லாத வசதிகளை நாமே நிறுத்தலாம்.




இந்தியாவில் முதல் இடத்தில் உள்ள மொபைல் ஆப்பரேட்டர் ஏர்டெல் என்பது எல்லோருக்கும் தெரியும்.  எல்லா மொபைல் ஆப்பரேட்டர்களிலும் உள்ள ஒரு முக்கிய பிரச்சனை ஏதாவது ஒரு Service activate ஆகி இருந்ததென,
நாம் பணம் போடும்போது நம் பணத்தை மொத்தமாக எடுத்துவிடுவார்கள் அல்லது தினமும் ஒரு ஒரு ரூபாயாக எடுத்து விடுவார்கள்.  பிறகு Customer Care 'க்கு போன் செய்தால்.  அவர்கள் 24 மணி நேரத்தில் நிறுத்திவிடுகிறோம் என்று கூறுவார்கள் அதை நம்பி நாம் Recharge செய்தால் திரும்பவும் பணம் போய்விடும்.

ஆனால் இந்தியாவில் முதன்மை ஆப்பரேட்டர்களில் உள்ள ஏர்டெல் அந்த பொறுப்பை நம்மிடமே விட்டுவிட்டது.

புதிதாக எதாவது Service Activate அல்லது DeActivate என எது வேண்டுமானாலும் நாமே நம் மொபைலிலேயே செய்துக் கொள்ளலாம். 


எப்படி என்பதை பார்க்கலாம்?

முதலில் *121# Dial  செய்யுங்கள்.

இப்போது உங்களுக்கு ஒரு Menu தோன்றும்.


  1. My Airtel My Offer
  2. Balance & Validity
  3. Coupon Recharge
  4. Start a Service 
  5. Stop a Service
  6. Recharge Now
0. Next

Replay With your Choice.


இதில் 5 அதாவது Stop a Service தேர்ந்தெடுத்து Reply செய்யுங்கள்.
பிறகு ஒரு Menu தோன்றும் அதில் உங்கள் மொபைலில் என்ன Service Activate ஆகியுள்ளது என தெரியும்.

  1. Teen Pack
  2. SMS Pack

என இவ்வாறு தோன்றும்.


இதில் உங்களுக்கு எந்த Service வேண்டாமோ அதை (அதாவது 1 அல்லது 2 ஐ ) தேர்ந்தெடுத்து Reply செய்யுங்கள்.

பிறகு வரும் மெனுவில் 1 தேர்ந்தெடுத்து Reply செய்யுங்கள்.  இப்போது உங்கள் Service முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கும்.

இனி Recharge செய்து பேசி மகிழுங்கள்.   

உலகிலேயே விலை குறைவான கம்ப்யூட்டர்-ஆகாஸ்


 

டிஎன்எஸ்- 'டாடா விண்ட்' என்ற கம்ப்யூட்டர் நிறுவனம் தயாரித்துள்ள கம்ப்யூட்டர்  (அக்டோபர்-6) தில்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிலேயே மிகவும் விலை குறைந்த இந்த கம்ப்யூட்டருக்கு, 'ஆகாஷ்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.

மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபல் கலந்து கொண்டு, 7 அங்குல அகல தொடு திரை மற்றும் வீடியோ வசதி கொண்ட நவீன கம்ப்யூட்டரை அறிமுகப்படுத்தினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

மாணவர்களின் தொழில் நுட்ப திறனை அதிகரிக்க வேண்டும் என்றும், கிராம மாணவர்களுக்கும் நகர மாணவர்களைபோல அறிவுத்திறனை வளர்த்துக்கொள்ள வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடனும், இந்த திட்டம் நிறைவேற்றப்படுகிறது. இந்த கம்ப்யூட்டரின் விலை தற்போது ரூ.2,276 ஆகிறது. இது, பாதி விலையில் மாணவர்களுக்கு, வரும் 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வழங்கப்படும்.

கூடுதலாக மேலும் 10 லட்சம் கம்ப்யூட்டர்களை உற்பத்தி செய்ய கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு ஆர்டர் கொடுக்க இருக்கிறோம். அப்போது இதன் விலை ரூ.1,750 ஆக இருக்கும். ஒரு கம்ப்யூட்டரின் விலையை 500 ரூபாய்க்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இந்த கம்ப்யூட்டர்கள் 9-வது வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவில் மாணவர்களுக்கு பாதி விலையில் கம்ப்யூட்டர்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. இதைத்தொடர்ந்து 'டாடா விண்ட்' என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்துக்கு முதல் கட்டமாக 1 லட்சம் கம்ப்யூட்டர்கள் (லேப்டாப்) உற்பத்தி செய்ய மத்திய அரசு ஆர்டர் வழங்கியது.

'ஆகாஷ்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கம்ப்யூட்டர், உலகிலேயே மிகவும் விலை குறைந்த கம்ப்யூட்டராகும்.