Subscribe:
                              

Social Icons

27 ஜூலை, 2011

அப்படியா...........


   
  • கலிலியோவின் தந்தை ஒரு கம்பளி வியாபாரி.
  • மின்சார விஞ்ஞானி ஆம்பியரின் தந்தை சனல் வியாபாரி.
  • கணித மேதை பித்தாகரஸ் குத்து சண்டை போடுவதில் வல்லவர்.
  • ஜே.ஜே தாம்சன் ஒரு புத்தக வியாபாரி மகன்.
  • பெஞ்சமின் பிராங்கின் தந்தை மெழுகுவர்த்தி வியாபாரம் செய்தவர்.
  

26 ஜூலை, 2011

தெரிஞ்சிக்கோ........

வெட்டுகிளியின் ரத்தத்தின் நிறம் - வெள்ளை.

பெண் மூட்டைப்பூச்சி உணவில்லாமல் 500 நாட்களுக்கு மேல் உயிரோடு இருக்கும்.

வியர்வையின் நிறம் சிவப்பாக இருக்கும் விலங்கு - காண்டாமிருகம்.

விவசாயிகளின் நண்பன் மண்புழு என்று அறிவோம். பகைவன் - எலி.

வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்காத பாலூட்டிகள் - எலி மற்றும் கங்காரு.

உப்பை விரும்பி சாப்பிடும் விலங்கு - முள்ளம்பன்றி.


முதல் வாழ்த்து

        நாம் அனைவரும் பொஙகல் திருநாளை கொண்டாடுகிறோம்.இந்நாளன்று நாம் நமது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம் இந்த பழக்கம் எப்படி தோன்றியது என்று உங்களுக்கு தெரியுமா இதோ உங்களுக்காக

       தமிழில் முதன்முரையாக பொங்கல் வாழ்த்து அனுப்பும் முறை சென்னையில் 1928-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த பெரியசாமி தூரன், பனை ஓலைகளை அழகாக நறுக்கி வர்ணம் பூசி, பொங்கல் வாழ்த்துக்கள் தயாரித்தார்.

      அந்தப் பொஙகல் வழ்த்துக்களை திரு.வி.க., கல்கி உள்பட பலருக்கும் அனுப்பினார். அதுதான் தமிழில் அனுப்பப்பட்ட முதல் பொங்கல் வாழ்த்தாகக் கருதப்படுகிறது.

பரத நாட்டியம்






பரதம் என்றால் என்ன தெரியுமா?

                           (பர)தம் - 'தம்' பிடித்து ஆடுவது.                  
(ர)தம் - பதமாக ஆடுவது.
       (ப)ரதம் - ரதம்போல் ஆடுவது. 


                பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மைவாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலேயெ பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.   பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது.  இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். வரலாற்று நோக்கில், பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக்கலைஞரின் முக பாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.

                 இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.

                உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றூம் மேலக்கடம்பூர்ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.

              பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒரு புறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யோகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.
பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகளும் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். 
          இக்கலையின் ஆசிரியர்களில், 'வழுவூர் ராமையா பிள்ளை,திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை', 'தனஞ்சயன்', 'அடையார் லக்ஷ்மணன்', 'கலாநிதி நாராயணன்' ஆகியோர் குறிப்படத்தக்கவர் ஆவர்.

25 ஜூலை, 2011

தெரிந்து கொள்....

இந்தியா எந்த ஆண்டிலிருந்து ஜ.நா சபையின் உருப்பினராக இருந்து வருகிறது? - 1945.

ஆப்பிரிக்கக் கழுதை என்று அழைக்கப்படும் விலங்கு எது? - வரிக்குதிரை.

தமிழ்நாட்டில் யானைகள் சரணாலயம் எங்குள்ளது? - முதுமலைக்காடு.

இந்தியாவின் முதல் பெண் வெளிநாட்டுத் தூதுவர் யார் - விஜயலட்சுமி பண்டிட்.

வங்காள தேச நாணயத்தின் பெயர் என்ன? - டாக்கா.

சனிக்கிரகத்தின் நிறம் என்ன? - மஞ்சள்.

பூமியிலிருந்து பார்த்தால் சிவப்பு நிறத்தில் தெரியும் கோள் எது? - செவ்வாய்

24 ஜூலை, 2011

ஒரு வரி செய்திகள்

  • மனித உடலில் மிகவும் வலுவான தசை உறுப்பு-தொடை.

  • தேனிக்கு இரண்டு இரைப்பைகள் உள்ளன.

  • காரல் மார்க்ஸ் 'சமதர்மத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

  • தன்னுடைய உடலின் பெரும்பகுதியை மூளையாகக் கொண்ட  ஒரே பூச்சியினம்-எறும்பு.

  • உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றலைக் குறிப்பிடும் அலகு-கலோரி.

  • யுரேனஸ் கிரகம் பூமியின் நிறையைப் போன்று 14 மடங்கு பெரியது.ப்

  • புகழ்பெற்ற விளையாட்டான கபடி தோன்றிய இடம்-இந்தியா

  • வினிகரில் 'அசிட்டிக் அமிலம்' உள்ளது.

  • தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை வெளியிடுகின்றன.

  • சிங்பூரின் முந்தைய பெயர்-டெமாஸெக்.

  • ஒரு செல் உயிரியான அமீபாவின் உடல் புரோட்டோபிளாசத்தால் ஆனது.

  • சூரியக் குடும்பத்தை கண்டறிந்தவர்-கோபர் நிக்கஸ்.

  • 'பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண் மணி-இந்திரா காந்தி

  • நெல் சாகுபடி முறையை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்-சீனர்கள்.

  • உயிரியல் கோட்பாட்டின் தந்தை என்று அழைக்கப்படுபவர்-சார்லஸ் டார்வின்.

உலக மொழிகள்

  •   உலகம் முழுவதும் 5 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. 

  • சுமார் 107 கோடி பேர், சீன மொழியைப் பேசுகிறார்கள்.

  • ஆங்கிலத்தை முதல் மொழியாகக் கொண்டவர்கள் 51 கோடி பேர். ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவியுள்ளது. அந்த வகையில்,ஆங்கிலம் அறிந்தவர்களின் எண்ணிக்கை பல கோடி.

  • நியூகினி என்ற நாட்டில் மட்டும் 600 மொழிகள் பேசப்படுகின்றன.

  • வெனிசுலா நட்டில் திருமாய் என்ற மொழி பேசப்படுகின்றது.அந்த மொழியைப் பேசுகிறவர்கள் வெறும் 100 பேர்தான்.

23 ஜூலை, 2011

சாலை சாவுகள்

உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 லட்சம் மக்கள்,சாலை விபத்துகளில் உயிர் இழக்கின்றன்ர்.
எனவே வாகனம் ஓட்டும் அனைவரும் சாலைகளில் கவனமாக செல்லவும்.தயவு செய்து வாகனம் ஓட்டும் போது குடித்துவிட்டோ,தொலைபேசியில் பேசிகொண்டோ வண்டி ஓட்டாதீர்.அதே போல் இரு சக்கர வாகனங்களில் இரண்டு நபர்களுக்கு மேல் செல்லாதீர்கள். இந்த நண்பனின் அன்பான வேண்டுகோள்

அண்ணன் சுதந்திரம், தம்பி குடியரசு

 தூத்துகுடி மாவட்டம் பரமன்குறிச்சியில் அண்ணன் தம்பி இருவர்.அண்ணன் பெயர்           சுதந்திரம். தம்பி பெயர் குடியரசு. சுதந்திரதினம்-குடியரசு தினத்தன்று பிறந்ததால் இவர்களுக்கு இப்படி பெயர் சூட்டி இருக்கிறார்கள்.